
கோலிவுட் சினிமாவின் இளம் கவர்ச்சி ஹீரோயினாக பார்க்கப்பட்டு வருபவர் யாஷிகா ஆனந்த். இவர் முதன் முதலில் கவலை வேண்டாம் திரைப்படத்தில் நடித்து ஒரு சிறிய ரோல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலே நீச்சல் உடை பயிற்சியாளராக தான் அறிமுகப்படுத்தப்பட்டார்.
அதை தொடர்ந்து துருவங்கள் பதினாறு, இருட்டறையில் முரட்டு குத்து, நோட்டா, ஜாம்பி, பெஸ்டி உள்ளிட்டப் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். படத்திற்கு படம் கூடுதல் கவர்ச்சி காட்டி திக்கு முக்காட செய்பவர் யாஷிகா. இதனிடையே பிக் பாஸ் 2 நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார். சமூக வலைதளங்களில் எப்போதும் படு கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு வரும் யாஷிகா ஆனந்த்,
தற்போது ட்ரெடிஷனல் லுக்கில் பாவாடை தாவணி அணிந்து எடுத்துக்கொண்ட மிக அழகான க்யூட்டான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு யாஷிகாவா இது? இது என எல்லோரையும் வியக்கவைத்துள்ளார். அந்த அளவிற்கு கவர்ச்சியை காட்டாமல் மிகவும் ஹோமிலியான லுக்கில் இருக்கும் யாஷிகாவை பார்த்து ரசிகர்கள் உருகி வழிந்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.
View this post on Instagram