பொது இடங்களில் பெரும்பாலானோர் செய்யும் தவறுகள்..!!

பொது இடங்களில் பெரும்பாலானோர் செய்யும் தவறுகள்..

• பேங்க் – ல் வந்து பேனா கடன் கேட்பது.

• பொது இடம் என்றும் பாராமல், ஃபோனில் சத்தமாகப் பேசுவது.

• கேவலமான ரிங்டோன்களில் ஃபோனை அலற விடுவது.

• கூட்டத்தில் முண்டியடிப்பது. வேண்டுமென்றே மிதிப்பது தள்ளுவது.

• திருமண விருந்துகளில் இடம் பிடிக்க, சாப்பிடுபவர்களின் அருகிலேயே காத்திருப்பது.

• வரிசையில் நிற்காமல், யாரிடமாவது கெஞ்சி, குழைந்து டிக்கெட் வாங்குவது.

• எச்சில் துப்புவது.

• சிறுநீர் கழிப்பது.

• குப்பையைக் கொட்டுவதும்

• சத்தமாக மனைவியைத் திட்டுவது.

• முக்கியமான ஒரு கால் செய்யணும் என்று சொல்லி, யாரிடமாவது ஃபோனை வாங்கி கதை பேசுவது.

• அட்ரஸ் கேட்டுவிட்டு, சொன்ன திசைக்கு எதிர்திசையில் செல்வது.

• சிலர் கூப்பிடக் கூப்பிட கண்டு கொள்ளாத மாதிரி செல்வது.

• டிஸ்கவுண்ட் கேட்பது.

• அழுக்குக் காலோடு எதிர் இருக்கையில் கால்களை வைப்பது.

• தூக்கத்தில் அடுத்தவர் தோள் மீது அடிக்கடி சாய்ந்து கடுப்பேற்றுவது.

• சாலையில் தேங்கிய தண்ணீரின் மீது வேகமாக வண்டிகளை ஓட்டி, பாதசாரிகள் மீது வாரியடிப்பது.

• புகை பிடிப்பது.

• பசி என்று வரும் குழந்தைகளுக்கு
உணவு கொடுக்காமல் பணம் கொடுப்பது…….

இந்த தவறுகளை எல்லாம் தவிர்க்க வேண்டும்…

Read Previous

நல்ல தம்பதியர் என்பது என்ன..!! கணவன் மனைவி இருவரும் இந்த பதிவை கட்டாயமாக படிக்கவும்..!!

Read Next

படித்ததில் மனதை நெகிழ வைத்த கதை..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular