நாமக்கலில் மதுபோதையில் லாரியை ஓட்டிச் சென்று பள்ளத்தில் கவிழ்த்த ஓட்டுநரை, லாரியின் உரிமையாளர் சரமாரியாக தாக்கியுள்ளார். பேளுக்குறிச்சி அடுத்த வெள்ளாளப்பட்டி பிரிவு பகுதியில் தேங்காய் லோடு ஏற்ற சென்ற லாரி, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 6 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் அஜித்குமார் என்பவர் உயிர் தப்பினார். இதனையறிந்து அங்கு விரைந்த லாரியின் உரிமையாளர், “போதையில் லாரியை ஏன் எடுத்தாய்?” என கேட்டு அஜித்குமாரை தாக்கினார்.




