ஒரு திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கிய பின் ஏன் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆஷா தணிக்கை வாரியத்திடம் கேள்வி எழுப்பினார். விஜய்யின் “ஜன நாயகன்“ படத்தில் பாதுகாப்புப் படையின் இலச்சினை அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதால் மறுஆய்வுக்கு உட்படுத்துவதாக தணிக்கை வாரியத் தரப்பு கூறியது. ஜன., 5ஆம் தேதியே தயாரிப்பு தரப்பிடம் இது குறித்து தெரிவிக்கப்பட்டதாகவும், மறுதணிக்கை குழுவின் புதிய உறுப்பினர்களும் படத்தைப் பார்க்க வேண்டியிருப்பதால் 4 வாரங்கள் அவகாசம் தேவை என்றும் தணிக்கை வாரியம் கூறியுள்ளது.




