Oplus_131072
ஃபிர்ணி செய்வது எப்படி …..
தேவையானவை:
பால் – 2 லிட்டர், பாதாம் – 10, பாசுமதி அரிசி – கால் கப், நெய் – 2 டீஸ்பூன், சர்க்கரை – அரை கப், குங்குமப்பூ – சிறிதளவு.
செய்முறை:
கடாயில் நெய் விட்டு, பாசுமதி அரிசியை சேர்த்து, சிவக்க வறுக்கவும். இதைக் கொஞ்சம் பாலில் ஊறவைத்து அரைக்கவும். பாதாமை சூடான நீரில் ஊறவைத்து தோல் நீக்கி, சிறிதளவு பால் சேர்த்து அரைக் கவும். மீதமுள்ள பாலை அடுப்பில் வைத்து சூடாக்கி, கைவிடாமல் கிளறவும். அரைத்த பாசுமதி அரிசி, பாதாம் விழுது சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு சேர்ந்து கொதிக்கும்போது, சர்க்கரை, குங்குமப்பூ சேர்த்து கலந்து, அடுப்பை அணைக்கவும். இதை ஆறவிட்டு ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்……




