மாரடைப்பு பெரும்பாலும் அதிகாலை 4 மணி முதல் 10 மணிக்குள் ஏற்படுவதை நாம் பல நேரங்களில் பார்த்துள்ளோம். அதற்கான காரணம் என்ன என்பதை மருத்துவர்கள் சிலர் கூறுவதை இந்த பதிவில் காண்போம்.
மாரடைப்பு பெரும்பாலும் அதிகாலை 4 மணி முதல் 10 மணிக்குள் ஏற்படுவதாக இதய மருந்துவர்கள் கூறுகின்றனர். காலையில் உடலில் கார்டிசோல் & கேடகொலமைன் போன்ற மன அழுத்த ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கின்றன. இதன் காரணமாக இதயத்திற்கு செல்லும் ரத்தம் உறைதல், ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுதல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படுகின்றன. திங்கள்கிழமை வேலைப்பளுவை நினைத்து தூங்கச் செல்வதும், அதனால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக திங்கள் கிழமைகளில் அதிக மாரடைப்பு ஏற்படுகிறது.




