அமெரிக்கா விதித்த 50% வரிவிதிப்பால், திருப்பூரில் பின்னலாடைத் தொழில் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இதனால் பல சிறு, குறு நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. அமெரிக்காவுக்குச் செல்லும் ஏற்றுமதியில் திருப்பூர் 30-35% பங்களிக்கிறது. 2024-25 நிதியாண்டில் ரூ. 40,000 கோடி ஏற்றுமதி செய்த திருப்பூர், நடப்பு நிதியாண்டில் 25% வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமெரிக்காவின் ஆர்டர்கள் குறைந்ததால், பல நிறுவனங்கள் ஆள்குறைப்பு நடவடிக்கைக்குத் தள்ளப்பட்டுள்ளன.




