திருநெல்வேலி மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்’ மற்றும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் நடைபெற்றன. இதுவரை 7 மருத்துவ முகாம்களில் 19,879 பேர் பரிசோதனை செய்துகொண்டதில், 114 பேருக்கு தீவிர நோய்கள் கண்டறியப்பட்டு, உயர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 808 கர்ப்பிணி தாய்மார்களும் பரிசோதனை பெற்றுள்ளனர். இந்த முகாம்களில் 17 வகையான சிறப்பு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.




