அவளுக்காக எழுதிய கவிதை..!! அருமையான வரிகள்..!! படித்ததில் பிடித்தது..!!

Oplus_16908288

நீ என்னை
சந்திக்க விரும்பினால்
மழையாக
வெயிலாக
பனியாக
ஏதோ ஒரு ரூபத்தில்
சந்தித்து விடுகிறாய்

ஆனால் நானோ
சந்திப்பதற்குகோ
பேசுவதற்குகோ
நாட்டின் எல்லையை
கடப்பதை விட
மிக கடினமாக உள்ளது

மனதில் உள்ளதை
கொட்டி விடுகிறாய்
அது என்னை கொட்டி
தாக்கி விடுமே என்ற
எந்த எண்ணமுமில்லாமல்

அன்பு உன்னிடம்
மட்டுமில்லை
என்னிடமும் உள்ளது
அதைப் புரிந்து கொள்ளும்
மனநிலையில்
நீயில்லை
நீயாக இல்லை

வாழ்வதும் வீழ்வதும்
உனக்காக மட்டுமே
புரிந்து கொள்வாய்
என்று நம்புகிறேன்
அன்போடு காத்திருக்கிறேன்
தள்ளிவிட்டு அனாதையாக்கி விடாதே

நேரங்கள் உனக்கானவை
நிமிடங்கள் உனக்கானவை
காலங்கள் உனக்கானவை
என் காத்திருப்பும் உனக்காகவை
உயிரே விலகி விடாதே
மரணத்தைக் காண
தயாராக நானில்லை.

Read Previous

ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை.. வீடு வீடாக ஆய்வு..!! வெளியான தகவல்..!!

Read Next

செய்தது தவறு என்று தெரிந்தால் மன்னிப்பு கேட்கவும் தயங்காதீர்கள்..!! அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular