மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு பணம் டிச.15-ம் தேதி முதல் வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. முகாம்களில் விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு அடுத்த வாரத்திலிருந்து அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளனர். அப்போது, விண்ணப்பத்தில் அளிக்கப்பட்ட ஆதார், குடும்ப அட்டை, செல்போன் எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்படவுள்ளன.




