டெல்லி: ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற TET தேர்வில் தகுதி பெற வேண்டும் எனவும், ஓய்வுபெற 5 ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்களுக்கு மட்டும் தேர்வு எழுத விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.




