திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே இன்று (செப்.01) தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 30 மாணவர்கள் காயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தில் மாணவர்கள் பள்ளிக்குச் சென்றபோது பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.




