ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடம் என்ன செய்வேன் என்ற வாக்குறுதியை தவெக தலைவர் விஜய் அளித்துள்ளார். சென்னை நந்தனத்தில் நடந்த பரப்புரையில் பேசிய அவர், ‘ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், மகளிருக்கு அனைத்து அரசு பேருந்துகளிலும் இலவசம், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட சிறப்பு சட்டம், போதையிலிருந்து இளைஞர்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் கொண்டுவரப்படும். மேலும், மாவட்டம்தோறும் ஆட்சியர் அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று, மக்களை சந்தித்து குறைகளை கேட்பேன் என உறுதியளித்துள்ளார்.




