சென்னை மாம்பாக்கம்–மேடவாக்கம் சாலையின் மோசமான நிலை காரணமாக ஏற்பட்டதாகக் கூறப்படும் விபத்தில், 4 வயது சிறுவன் சுஷாந்த் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து பொன்மார் பகுதியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு, பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினர். சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




