பெண்களின் திருமண நன்னாளை முன்னிட்டு, 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு தரமான பட்டுப் புடவை வழங்கும் ‘அண்ணனின் சீர்’ திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார். மேலும், திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பட்டுப் புடவையின் குறைந்தபட்ச விலை ரூ.5,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், தரத்தில் எந்த சமரசமும் இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்தத் திட்டம் தொடர்பான அறிவிப்பு அண்மையில் மாநில பட்ஜெட்டிலும் இடம்பெற்றிருந்தது.




