தருமபுரி வெளிச்சந்தையில் உள்ள அரசு பள்ளியில் பிரகாஷ் குமார் (54) என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த 2019ல் அதே பள்ளியில் 6ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதுகுறித்து சிறுமி வீட்டில் சொல்லவே, பெற்றோர்கள் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்த வழக்கில் பிரகாஷ் குற்றவாளி என தற்போது தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம், அவருக்கு 7 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.15,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.




