இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரும் ஆஸ்கார் விருது வென்றவருமான ஏ.ஆர்.ரஹ்மான் இன்று (ஜன.6) தனது 59-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, அவருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது X தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். “இசையால் எல்லைகளை கடந்து எட்டுத்திக்கும் ஆளும் அன்பு இளவல்” என புகழாரம் சூட்டியுள்ள அவர், ரஹ்மான் தனது இசை போலவே என்றும் இளமையோடும் துள்ளலோடும் திகழ்ந்து பல சாதனைகளை படைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.




