நமக்கு தின்பண்டங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் நாம் எப்பொழுதும் சாப்பிடும் தின்பண்டங்களாக இல்லாமல் வேறு ஏதாவது இருந்தால் சுவாரஸ்யம் தான். அந்த வகையில் கேரளாவில் பேமஸ் ஆக இருக்கும் பழம் பொரிச்சது எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
மைதா மாவு சீரகம் நேந்திரங்காய் சர்க்கரை உப்பு எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். நேந்திரங்காயை தோல் நீக்கி தண்ணீர் வைத்து கழுவி நீளமாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
அதன்பின்பு மைதா மாவை நன்கு சலித்து உப்பு சீரகம் சர்க்கரை ஆகியவை சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடான பிறகு நேந்திரங்காயை மைதா மாவில் முக்கி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். அவ்வளவுதான் சுவையான கேரளா ஃபேமஸ் பழம் பொரிச்சது தயார்.




