உலகெங்கும் வாழும் இந்துக்களால் இன்று (ஆகஸ்ட் 27) விநாயகர் சதுர்த்தி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், காஞ்சிபுரம் சிங்க விநாயகர் கோயிலிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் களைகட்டியது. விநாயகருக்கு சிறப்பு அலங்காரமாக, ரூ.15 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் கொண்டு அலங்கார ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. பக்தர்கள் திரளாக வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.




