ஆயிரம் சண்ட வரும் ஆயிரம் மன கசப்பு வரும் ஏன் சில சமயம் பிரிவுகள் கூட வரும் ஆனாலும் அத்தனைக்கும் மீறி அதீதமான அன்பு நாம நேசிக்கிறவங்களுக்கு நாம கொடுக்க நினைக்கிற அந்த நேசம் ஒவ்வொருத்தருக்குள்ளயும் புதைஞ்சு கிடக்கும். பல இடங்கள்ல அத வெளிய கொண்டு வரவிடாம ego அழுத்தி வச்சு இருக்கும். அந்த ego னால அன்புக்குரியவங்கள இழந்தவங்க நிறைய பேர் இருக்காங்க. ஒரு பத்து நிமிசம் அந்த ego வ தூக்கி வச்சுட்டு நமக்கானவங்க கிட்ட மனசு விட்டு பேசுரதால நாம ஒண்ணும் குறைஞ்சு போய்ட போரது இல்ல. யாரா இருந்தாலும் அவங்க என்ன பேச வாராங்க ஏதோ நமக்கு புரிய வைக்க ட்ரை பண்றாங்க என்றத நாம காது குடுத்து கேட்டு இருந்தாலே இங்க பல காதல் பிரவுல முடிஞ்சு இருக்காது. தீர்க்கவே முடியாத சண்டையா !! கஸ்டமா இருந்தாலும் ஒரு கொஞ்ச நாளைக்கு அவங்களுக்கான space அ குடுத்து விலகி இருங்க. என்ன தான் உச்ச கட்ட சண்டை கோவம்னாலும் எது நடந்தாலும் நீங்க நேசிக்கிரவங்கள மட்டும் இறுக்கமா புடிச்சுக்கங்க. ஏன்னா பிரிஞ்சு போரதுக்கு ஆயிரம் காரணம் இருக்கும் ஆனா சேர்ந்து வாழ காதல் என்ற ஒரே காரணம் தான்.
இறுகப்பற்று❤️❤️ காதல் தெய்வீகமானது….




