பஞ்சாப்: மன்பிரீத் என்பவரை மணந்த இளம்பெண் காஜல் கணவர் குடும்பத்தாருடன் வசித்து வந்தார். சிறிய விஷயங்களுக்கு கூட குடும்பத்தினர் காஜலை துன்புறுத்தி வந்தனர். இதில் உச்சமாக நேற்று (அக்.01) மன்பிரீத் தனது பெற்றோருடன் சேர்ந்து காஜல் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்தார். இதில் பலத்த காயமடைந்த காஜல் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குற்றவாளிகள் மீது போலீஸ் வழக்கு பதிந்து விசாரிக்கிறது.




