ஈர்ப்பு விதியின் முன்னோட்டத்தை இதற்கு முந்தய ஒரு பதிவில் பார்த்தோம். இந்த பதிவில், ஈர்ப்பு விதி என்றால் என்ன? இது எவ்வாறு ஆன்மீகத்துடன் ஒத்துப்போகிறது என காண்போம். இது ஒரு உலகளாவிய விதியாக கருதப்படுகிறது. ஏனெனில் இது உண்மை என கூற பல ஆதாரங்கள் இருக்கின்றன. இந்த விதியை பற்றி இந்த பதிவில் காண்போம்.
ஈர்ப்பு விதியானது நமது மனதில் எழும் சிந்தனைகளின் மூலம் செயற்படுகிறது. நாம் அறிவியலில் ஒரு உலகளாவிய விதியின் படி “லைக் அட்ராக்ட்ஸ் லைக்” என படித்து இருப்போம். அதாவது, நமது மனதில் எழுவது நல்ல சிந்தனைகளாக இருந்தால் நமக்கு நல்லது நடக்கும். இல்லையெனில் நேர்மாறாக நடக்கும். இதுவேய ஈர்ப்பு விதியாகும்.
ஆன்மீகத்தின் படி, நாம் அனைவரும் அலைவரிசைகளால் உருவானவர்கள். அதை அறிவியலின் படி, ஆறா என கூறுவார்கள். நமது உடலையும் தாண்டி ஒரு குறிப்பிட்ட தொலைவில் அது படர்ந்து இருக்கும். இந்த அலைவரிசை தான் நம் எண்ணங்களை வைத்து அதே போல் இருக்கும் செயல்களை நம்மிடம் கொண்டு வருகிறது.
எடுத்துக்காட்டாக, ஒருவரை நாம் திட்டையில் பார்த்து திட்ட வேண்டும், இல்லையேல் சனியன் என்று கூற கூடாது. அப்படி கூறினால் நமக்கு சனி பிடித்து விடும் என நம் முன்னோர்கள் கூறி கேட்டு இருப்பீர்கள். அதற்க்கு காரணம் இதுவே. இந்த விதியை பற்றிய மேலும் பல தகவல்களை தினமும் ஒரு பதிவாக காண்போம்.




