உங்கள் உடம்பில் ரத்தம் குறைவாக உள்ளதா..?? அப்போ ரத்தத்தை அதிகரிக்கும் இந்த உணவுகளை கண்டிப்பா சாப்பிடுங்க..!!

இரத்தத்தை உற்பத்தி செய்யும் உணவுகள்…
உடலில் இரத்தம் குறைவாக இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், சுவாசக்கோளாறுகள் போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகுவோம்.
அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.
மேலும், அதனை உற்பத்தி செய்யும் உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.
பேரீச்சம்பழம்
பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும்.
அத்திப்பழம்
தினசரி இரவு அரை டம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்.
பீட்ரூட்
பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.
முருங்கை கீரை
முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.
தக்காளி
தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

Read Previous

எண்ணற்ற வியாதிகளுக்கு மருந்தாகும் முருங்கை..!!

Read Next

கறிவேப்பில்லை தொக்கு செய்வது எப்படி..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular