குடும்பமாக வாழும் பல பேர் அவர்களுக்கு என தனி துண்டு உடை பல் துலக்கும் பிரஸ் வைத்திருந்தாலும் சோப்பை அவர்களுக்கு என தனியாக வைத்திருக்க மாட்டார்கள். வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும் ஒரே சோப்பை பயன்படுத்தி அது தீர்ந்தவுடன் அடுத்த சோப்பை உபயோகிப்பார்கள்.
நமது உடலில் படர்தாமரை தேமல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் அவர்களெல்லாம் நிச்சயமாக தனியாக ஒரு சோப்பு வைத்திருக்க வேண்டும். இருப்பினும் ஒவ்வொருவரும் தனித்தனியாக சோப்புகளை பயன்படுத்த வேண்டுமா என்ற கேள்வியும் அதனால் ஏதேனும் பிரச்சினைகள் வருமா என்ற கேள்வியும் நமக்கு நிச்சயம் இருக்கும். சோப்புகளில் கிருமி நாசினி அதிகமாக இருக்கும். அதனால் பாக்டீரியா பற்றி பிரச்சனை இல்லை.
குடும்பத்தினர் அனைவரும் சோப்புகளை பயன்படுத்தலாம். ஆனால் தேமல் படர்தாமரை பிரச்சினை கொண்டவர்கள் தனி சோப்பை தான் பயன்படுத்த வேண்டும். அல்லது உங்களுக்கு பிறர் உபயோகித்த சோப்பை உபயோகிப்பதில் கூச்சம் இருந்தால் தனியாக ஒரு சோப்பு பயன்படுத்தலாம். ஆனால் சோப்புகளை தவிர நாம் அனைவரும் பயன்படுத்தும் தலையணை துண்டு படுக்கை மற்றும் படுக்கை விரிப்பு மூலம் பாக்டீரியா பரவுவது உறுதி. ஆகையால் எதர்க்கும் சோப்பையும் தலையணையையும் தனித்தனியாக பயன்படுத்துவது மிகவும் நல்லது.




