பொதுவாக மக்கள் அனைவர்க்கும் உடல் ரீதியாக ஏதேனும் ஒரு பிரச்சனை இருக்கும். அந்த வகையில் உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், சிலரது கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகி மனதளவில் துன்புறுகிறார்கள். அவர்களுக்கு உதவும் விதமாக 14 நாட்களில் உடல் எடையை குறைப்பது எப்படி என்பதை குறித்து இப்பதிவில் நாம் காணலாம்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், அதிகமாக நோய் எதிர்ப்பு சக்தி உள்ள மஞ்சளை நம் உணவில் அன்றாடம் சேர்த்துக்கொள்ள வேண்டும். மஞ்சள் நம் கொழுப்பு சேமிப்பை கட்டுப்படுத்தவும், பசியை குறைக்கவும் உதவுகிறது. தினமும் காலை எழுந்தவுடன் டீ அல்லது காபி அருந்துவதற்கு மாறாக, 1 1\2 டம்ளர் தண்ணீரில், 1\2 சிட்டிகை மஞ்சள்தூள், 1\4 துண்டு இஞ்சி, 1\4 சிட்டிகை மிளகு தூள் சேர்த்து நன்கு கொதிக்கவைக்க வேண்டும். அதன்பின் அதை வடிகட்டி தினமும் பருகி வந்தால் உடலில் ஏற்படும் மாற்றத்தை நம்மால் அறிய முடியும். மேற்கூறிய செய்முறையை தொடர்ந்து 14 நாட்கள் செய்துவந்தால் உடல் எடை விரைவில் குறைந்துவிடும்.




