உங்க வீட்ல ஃப்ரிட்ஜ் யூஸ் பண்றீங்களா?.. அப்போ இந்த தவறை இனி செய்யாதீங்க..!!

நம் எல்லோர் வீட்டிலும் பொதுவாகவே தற்போது வைத்திருக்கும் பொருட்களில் ஒன்றுதான் இந்த பிரிட்ஜ். இன்றைய காலகட்டத்தில் மக்கள் பெரும்பாலானார் வீடுகளில் மின்னணு சாதனங்களை பயன்படுத்துகின்றனர் பாத்திரம் விளக்குவதில் இருந்து துணி துவைப்பதில் இருந்து காய்கறிகளை பாதுகாத்து வைப்பது வரை மின்னணு சாதகங்களான பிரிட்ஜ் வாஷிங் மெஷின் போன்ற பல மின்னணு சாதனங்களை பயன்படுத்துகின்றனர் அதில் ஒன்றுதான் இந்த பிரிட்ஜ். அதிகபட்ச நன்மைகளை பெற்றுக் கொள்ள உதவும் உதவும் இதில் மறைக்கப்பட்ட பட்டனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். பிரிட்ஜ் அதாவது இந்த குளிர்சாதன பெட்டி என்பது காய்கறிகளை நாம் வைப்பதற்கும் இட்லி மாவு போன்ற பல பொருட்களை நாம் கெட்டுப் போகாமல் இந்த பிரிட்ஜில் வைத்து காய்கறிகளை எடுத்து சமைக்கிறோம் இந்நிலையில் பிரிட்ஜில் உணவுகள் வைத்தால் கெட்டுப் போவதாகவும் அதிக நேரம் கெடாமல் இருப்பதில் என்றும் பலரும் கூறிவரும் நிலையில் அந்த ரகசிய பட்டன் சிக்கலை தீர்க்கும். மேலும் இதனை சரியாகப் பயன்படுத்தினால் மட்டுமே உணவு நீண்ட நேரம் கெடாமல் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.அதாவது ஃப்ரிட்ஜில் இருக்கக்கூடிய வெப்பநிலை பட்டனை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் இந்த பட்டனானது பொதுவாக ஜீரோவில் இருந்து ஐந்து வரையிலான எண்கள் எழுதப்பட்டிருக்கும் மக்கள் பலரும் இதனை டிகிரி செல்சியஸ் உடன் தொடர்பு படுத்துகிறார்கள் ஆனால் இது குளிர்சாதன பெட்டியில் திறனை காட்டுகிறது அதாவது உணவு தரநிலை கூற்றுப்படி குளிர்சாதன பெட்டியை 5 செல்சியஸுக்கும் குறைவாக வைக்க வேண்டும். ஏனென்றால் எட்டு செல்சியஸ்க்கு அதிகமான வெப்பநிலை என்பது பாக்டீரியாக்களை விரைவாக வளர வழி வகுத்து உணவுகளும் சீக்கிரமாக கெட்டுப் போவதற்கும் வழி வருகிறது இதனால் அதில் கொடுத்திருக்கும் கையெட்டை பார்த்து வெப்பநிலையை சரியாக அமைப்பது என்பது ஒரு முக்கிய ஒன்றாகும். இதை சரிபார்க்க அல்லது தெரிந்து கொள்ள ஒரு தெர்மாமீட்டர் அல்லது ஒரு கிளாஸ் தண்ணீரை நடுத்தர அலமாரியில் இரவு முழுவதும் வைத்து பார்த்தால் சரியான வெப்பநிலை நன்றாக தெரியும் சமைத்த உணவை மேலே அலமாரியில் வைக்க வேண்டும் மற்றும் பச்சை இறைச்சியை கீழே வைக்கலாம் பழங்கள் மட்டும் காய்கறிகளை வெவ்வேறு இடங்களில் ஃப்ரிட்ஜில் வைத்து நாம் உண்ணுவது நல்லது .முக்கியமாக ஃப்ரிட்ஜில் உள்ள அந்த வெப்பநிலை பட்டனை சரியான நிலையில் வைத்தாலே உணவுகள் எதுவும் கெடாது என்பதும் குறிப்பிடத்தக்கது. மக்கள் பலரும் அதை நன்கு கவனித்து பயன்படுத்தினாலே உணவுகள் விரைவில் கெடாமல் இருக்கும்.

Read Previous

உங்க வீட்ல கொசு தொல்லை அதிகமா இருக்கா?.. இத ட்ரை பண்ணி பாருங்க..!!

Read Next

புரட்டாசி மாதத்தில் மட்டும் வெங்கடேச பெருமாளுக்கு நோன்பு இருப்பது ஏன்?.. இதன் சிறப்பு என்ன?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular