உடலை சோர்வடைய வைக்கும் 5 தினசரி பழக்கங்கள்..!!

Oplus_131072

உடலை சோர்வடைய வைக்கும் 5 தினசரி பழக்கங்கள்:

1. காலை எழுந்த உடனே ஃபோன் பார்ப்பது உடல் சோர்வடைய முதல் காரணம்.

கண் விழித்தவுடன் திரையில்
நீல ஒளி (blue light) பார்க்கும் போது மூளை உடனே “stress mode”-இல் செல்கிறது. இதனால் நாள் முழுவதும் கவனம் சிதறும், சோர்வு ஏற்படும்.

2. காலை உணவை தள்ளிப்போடுவது பலவீனத்தை அதிகப்படுத்தும்.

காலை உணவு இல்லாமல் உடல்
நீண்ட நேரம் எரிசக்தி இன்றி இருக்கும். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து சோர்வு, தலைசுற்றல் போன்றவை வரும்.

3. முழு நாளும் நாற்காலிலே உட்கார்ந்து இருப்பது, இரத்த ஓட்டத்தை மெதுவாக்கி, உடலை சோர்வடைய செய்யும்.

உடல் இயக்கம் இல்லாததால்
இரத்த ஓட்டம் குறையும்,
தசைகள் சோர்வடையும். இதனால் சோர்வும், வலி உணர்வும் அதிகரிக்கும்.

4. தண்ணீர் குடிப்பதை தவிர்க்கும் பழக்கம் சோர்வை ஏற்படுத்தும்.

நீர்ச்சத்து குறைவு உடல் செயல்பாடுகளை பாதிக்கிறது.
சிறிய அளவிலான dehydration கூட சோர்வையும் கவனச் சிதறலையும் உண்டாக்கும்.

5. தாங்க முடியாத மன அழுத்தம் கூட உடலை பலவீனமாக்கும்.

ஆம். நீண்டகால மன அழுத்தம் ஹார்மோன் சமநிலையை பாதித்து, சோர்வையும், தூக்கமின்மையையும், உடல் பலவீனத்தையும் ஏற்படுத்தும்.

இவை அனைத்தும்
“சிறிய பழக்கங்கள்” என்றாலும், தொடர்ந்து இருந்தால் உடல்,
மனம் இரண்டிலும் பெரும்
தாக்கம் ஏற்படும்.
இதை தவிர்க்க — காலையில்
சில நிமிடங்கள் உடற்பயிற்சி,
சத்தான காலை உணவு,
போதுமான தண்ணீர், மற்றும்
மிதமான மன அமைதி என வழக்கமாக இவைகளை செய்யும்போது
சோர்வு குறையும்.

Read Previous

தானமாக யாரிடமும் பெறக்கூடாத மற்றும் கொடுக்கக் கூடாத பொருட்கள் எவை தெரியுமா..??

Read Next

ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular