காதல் எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு முறை வந்து செல்லும்..
ஒரு சில காதல் அழ வைக்கும்..
ஒரு சில காதல் அனுபவத்தை கொடுக்கும்..
ஒரு சிலருக்கு காதல் இளமையில் வரலாம்,, ஒரு சிலருக்கு திருமணம் ஆன பிறகு வரலாம்,, ஒரு சிலருக்கு முதுமையில் வரலாம்,,,
திருமணத்துக்குப் பிறகு வருவதால் இது கள்ளக்காதல் என்று யாரும் நினைத்து விட வேண்டாம். நல்ல காதலும் இருக்கத்தான் செய்கிறது…
முதுமையில் வரும் காதல் உடம்பு சுகத்துக்காக என்று நினைக்க வேண்டாம்..
ஒரு பிரிவில்லாத அன்புக்காக மட்டுமே…..
ஒரு சிலருக்கு அவளுடைய அவனுடைய முகத்தை பார்த்தால் போதும் என்று நினைப்பார்கள்..
ஒரு சிலருக்கு அவளுடைய அவனுடைய குரலை கேட்டால் போதும் என்று நினைப்பார்கள்..
காதலிப்பவர்கள் எல்லாம் ஒன்றாக வாழ்பவர்கள் இல்லை.. ஏதோ ஒரு காரணத்துக்காக தன் சூழ்நிலை காரணமாக விலகி விட்டு செல்கிறார்கள்.. தவிர விரும்பி அல்ல.
அவர்கள் விலகி தான் இருக்கிறார்கள் தவிர அவர்கள் மனதுக்குள் எப்போதும் அவர்களுக்கென்று ஒரு இடம் உண்டு.. இதை யாராலும் மறுக்க முடியாது..
இது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி இருவருக்குமே உண்டு…
இதயம் பலகீனமானது சிறிய ஏமாற்றத்தைக் கூட தாங்க முடியவில்லை.




