திருவள்ளூர் மாவட்ட ஊர்க்காவல் படை வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு. இங்கு 25 காலியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து ( ஆண்கள் மட்டும்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
| நிறுவனம் | Tamilnadu Home Guard |
| காலியிடங்கள் | 25 |
| வேலை இடம் | திருவள்ளூர் மாவட்டம் |
| விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.01.2025 |
அடிப்படை தகுதி:
விண்ணப்பதாரர் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
அவருடைய இருப்பிடம் (Address) திருவள்ளூர் மாவட்ட காவல் எல்லைக்குள் அமைந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 20 வயது நிரம்பியவராகவும் அதிகபட்சமாக 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
ஊர்க்காவல் படைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் SSLC 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
பொதுவான தகுதி:
பொதுநல சேவை, மற்றும் தன்னார்வ தொண்டு செய்ய விருப்பம் உள்ள நபராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை இணைத்து ( நகல் மட்டும்) திருவள்ளூர் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் நேரில் சென்று சமர்ப்பிக்கலாம்.
இணைக்க வேண்டிய ஆவணங்கள்:
பிறப்பு சான்றிதழ்
ஆதார் அட்டை
கல்வி தகுதி சான்றிதழ்
சமீபத்திய புகைப்படம் – 2 (Passport Size Photo)
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க கடைசி தேதி: 15.01.2025
குறிப்பு:
சரியான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.




