நீங்கள் பயணிக்கும் வாகனம் நீர் நிலை ஒன்றில் விழுந்து மூழ்கிவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள் – #நடக்கக்கூடாது ஆனாலும் நடந்து விட்டால் முதலில் என்ன செய்வீர்கள்?
அது பற்றிய சில #வழிகாட்டல்களையே இங்கு பார்க்கப் போகிறோம். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் என்ன செய்வது என்று தெரியாது. ஆதலால் நீங்கள் பின்வரும் வழிகாட்டல்களை பின்பற்றத் தவறாதீர்கள்.
நீங்கள் உடனே கதவுகளைத் திறக்க முயற்சித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.
ஏனெனில் தண்ணீரின் அழுத்தம் அதனை
திறப்பதை சாத்தியமற்றதாக்குகிவிடும். தப்பிக்கவும் முடியாமல் போகும்.
ஜன்னல்களையும் நீங்கள் பணிக்க முற்படாதீர்கள். ஏனெனில் பாய்ந்து வரும் நீரோட்டத்தில் சிக்கி, உங்களால் தப்பிப்பது மிகவும் கடினமாகும்.
உங்கள் வாகன இருக்கையில் காணப்படும் “ஹெட்ரெஸ்ட்டை” தலைத் #தலையாணையை கழற்றி, அதிலுள்ள
#உலோக_முனையை பயன்படுத்தி அல்லது ஏதாவது உடைக்கும் கருவிகள் இருந்தால் அதனை பயன்படுத்தி வாகனத்தின் பின்புற கண்ணாடியை உடைக்க முயற்சி செய்யுங்கள். அதுவே நீங்கள் தப்பிக்க இலகுவான வழியாகும்.
ஏன் பின்புறக் கண்ணாடி?
பெரும்பாலான வாகனங்கள் தணீணீரில் மூழ்கும் போது முதலில் பின்புறம் மிதக்கும்
படியாகவே வடிவமைக்கப்படுகின்றன.
ஆதலால் நீங்கள் பின்புற கண்ணாடியால் தப்பிக்க முயற்சிப்பதே மிகவும் ஏற்ற மற்றும் பாதுகாப்பான வழியாகும்.




