எந்தெந்த செயல்கள் ஒருவனை ஏழ்மை நிலையிலேயே வைத்திருக்கும்?
1.சோம்பேறித்தனம்..
2.தன்னம்பிக்கை இன்மை…
3.ஊக்கமின்மை…
4.முயற்சியின்மை..
5.நேரம் கூடி வரவில்லை என்ற பேச்சு..
6.நாள் நட்சத்திரம் பார்த்துக் கொண்டே இருப்பது.
7.கனவில் வாழ்வது..
8.குடும்பம் அல்லது சூழ்நிலையைக் குறை கூறுவது..
9.படிப்படியாய் முன்னேற்றத்தில் அக்கறை கொள்ளாதது…
10.ஒரே நாளில் ஒபாமா ஆகி விடும் சூத்திரம் கண்டுபிடிப்பதிலேயே காலத்தை வீணாக்குவது.
11.வரவுக்கு மீறிய செலவுகள் செய்வது, அதாவது ஆடம்பரமான வாழ்க்கை முறை ஏழ்மை ஆக்கும்…
12.போதை பழக்கம், சூதாட்டம், தவறான நட்புகள், தவறான பெண் தொடர்புகள் போன்ற தீய பழக்கவழக்கங்கள்
யாரையும் ஏழ்மை ஆக்கும்…
13.இந்த காலத்தில் சினிமா படம் தயாரித்தால் போதும். கண்டிப்பாக ஒரே படத்தில் ஏழை ஆகிவிடலாம்…
14.திட்டமிடல் இல்லாத வாழ்க்கை முறை.
அதனால் ஏற்படும் தவறான முடிவுகள்…
15.உழைப்பை விட பொழுதுபோக்கிற்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பது.
உழைப்பே உயர்வு தரும்.




