தானம் செய்யப்பட்ட இதயம் ஒன்றை 13 கி.மீ. தொலைவை வெறும் 13 நிமிடத்தில் கடந்து ஐதராபாத் மெட்ரோ நிர்வாகம் சாதனை படைத்துள்ளது.
பொதுவாக உயிரிழந்த நபர்களின் உறுப்புகள் தானம் செய்வதன் மூலமாக வேறு ஒருவர் உயிர் வாழ்கிறார்கள். அதன்படி கடந்த சில வருடங்களாக உடல் உறுப்பு தானம் அதிகரித்து வருகிறது. அதன்படி பெரும்பாலான மக்கள் முன்மொழிகின்றேன். அதுமட்டுமின்றி, அப்படி தானம் செய்யும் உறுப்புகளை குறிப்பிட்ட நேரத்தில் பொருத்தும் கடமை மருத்துவர்களுக்கு இருக்கிறது.
அதன்படி, தற்போது இது மாதிரியான சம்பவத்தை தான் ஐதராபாத் மருத்துவர்கள் செய்துள்ளனர். அதாவது, ஐதராபாத்தில் உள்ள எல்.பி. நகரின் காமினேனி மருத்துவமனையில் பெறப்பட்ட இதயத்தை லக்டிகாபுலில் இருக்கும் க்ளெனீகிள்ஸ் குளோபல் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். இந்த இரண்டு மருத்துவமனைக்கு இடைப்பட்ட தூரம் சுமார் 13 கி.மீ தொலைவு.
இதை வெறும் 13 நிமிடத்தில் கடந்து இதயத்தை பொருத்தி சாதனை படைத்துள்ளனர். மேலும் போக்குவரத்து மிகுந்த நேரத்தில் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல ஐதராபாத் மெட்ரோ நிர்வாகம் உதவி செய்துள்ளது. இந்த விவகாரத்தில் முதுகெலும்பாக மெட்ரோ நிர்வாகம் இருந்துள்ளது. தற்போது மருத்துவர் மற்றும் மெட்ரோ நிர்வாகம் அதிகாரிகளுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.




