Oplus_131072
ஒரு கோயிலால் எத்தனை பேர் வாழ்வு மலர்கிறது என்று தெரியுமா?
* பூ உற்பத்தி செய்பவர்.
* மாலையாக கட்டுபவர்.
* அதனை விற்பனை செய்பவர்.
*கோவிலில் சுவாமிக்கு நிவேத்யம் செய்ய அரிசி பருப்பு கனிவகை, காய் வகை கொடுக்கும் விவசாயப் பெருமக்கள் மற்றும் வியாபாரிகள்.
* அர்ச்சகர்.
* அர்ச்சனை சீட்டு கொடுப்பவர்.
* கோயில் காவலாளிகள்,
* தேங்காய் உற்பத்திசெய்பவர்,
* தேங்காய் விற்பனைசெய்பவர்.
* ஊதுபத்தி உற்பத்தி செய்பவர்
* அதனை விற்பனை செய்பவர்கள்
(மொத்தமாகவும் சில்றையாகவும்,)
* கற்பூரம் உற்பத்தி செய்பவர்கள்,
* அதனையும் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைசெய்பவர்கள்,
*சந்தனம், குங்குமம் ஆகியவற்றை உற்பத்தி செய்தும் விற்பனை செய்பவர்கள்.
* வாழைமரம் வளர்ப்பவர்கள்.
* அவற்றை விற்பனை செய்பவர்கள்,
* கோயிலைச்சுற்றி கடைவைத்து எல்லாப் பொருட்களையும் விற்பனை செய்பவர்கள்,
* இதில் மாற்று மதத்தவர்களும் அடக்கம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
* கோயிலுக்கு வருபவர்களுக்கான போக்குவரத்து வசதிகளைத்தரும் வாகன உரிமையாளர்கள்.
* கோவிலை நேரத்துக்கு நேரம் சுத்தப்படுத்தும் ஏராளமான ஊழியர்கள்..
* மடப்பள்ளியில்,(சமையலறையில் சமையலில் ஈடுபடும் அத்தனை ஊழியர்களும்).
* தினம்தோறும் கோயிலில் கிடைக்கும் உணவினை, பிரசாதத்தை நம்பியிருக்கும் எத்தனையோ ஏழைக்குடும்பங்கள்.
* கோயிலில் பணிபுரியும் சிற்றூழியர்தொடக்கம்
முகாமையாளர் வரை
* ஓதுவார்கள்,
* நாதஸ்வர, தவில் கலைஞர்கள்.
* ஒலி, ஒளி அமைப்பாளர்கள்.
* சிற்ப கலைஞர்கள்.
* ஓவியர்கள்.
* கட்டட கலைஞர்கள்.
* ஆசாரிமார்கள்.
* விசேட காலங்களில் தொழில்புரியும் மேலதிகக்காவலர்கள்,
இப்படி கோயில்களால் ஏராளமான மக்களுக்கு புண்ணியம் கிடைக்கிறது. என்பதால்தான் அன்றைய மன்னர்கள் பிரமாண்டமான கோயில்களை
உருவாக்கினார்கள்.




