தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஆக.9) கனமழை காரணமாக அனைத்து தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை என்பதால் அரசுப் பள்ளிகளுக்கு ஏற்கெனவே விடுமுறை அறிவிக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




