Oplus_16908288
கல்லூரி சுற்றறிக்கை விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு எதிராக சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
“சிபிஐ, சிபிஎம் ஆகியவை தடை செய்யப்பட்ட கட்சிகளா? அதிகாரிகள் யாருடைய கட்டுப்பாட்டில் செயல்படுகின்றனர்?” என அவர் கேள்வி எழுப்பி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும், கம்யூனிஸ்ட் கட்சிகளை தமிழக அரசு ஒடுக்க முயற்சிக்கிறதா என்றும் சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஆளும் தரப்புக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகள் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கல்லூரி சுற்றறிக்கை தொடர்பான விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




