தாம்பரம் அடுத்த மணிமங்கலத்தில் கல்லூரி மாணவி குளிப்பதை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி தியாகு (32) என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட அவர், தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார். அவரிடமிருந்த செல்போனைப் பறிமுதல் செய்துள்ள போலீசார், அதில் ஏதேனும் வீடியோக்கள் உள்ளதா எனத் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.




