கர்நாடக மாநிலம் பெங்களூருவில், தன்னை திருமணம் செய்ய மறுத்த 20 வயதான காதலி யாமினி ப்ரியாவை, அவரது காதலன் கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பி.பார்ம் முதலாம் ஆண்டு மாணவியான யாமினி ப்ரியா, தேர்வு எழுத கல்லூரிக்கு சென்றபோது, வீட்டிற்கு எதிரில் வசித்த விக்னேஷ் (28) இக்கொடூரத்தை செய்துள்ளார். வயது வித்தியாசம் காரணமாக யாமினி மறுத்ததால் ஆத்திரமடைந்த விக்னேஷ், கூர்மையான ஆயுதத்தால் கொடூரமாக தாக்கி கொலை செய்தான். இதையடுத்து, இந்த கொலையுடன் தொடர்புடைய விக்னேஷ் உட்பட 3 பேரை போலிசார் கைது செய்துள்ளனர்.




