Oplus_131072
கை மருந்து வைத்தியத்தில் கல் உப்பை எப்படி பயன்படுத்துவது..??
கல் உப்பைச் சட்டியில் போட்டு நன்றாக வறுத்து, அதை ஒரு சிறிய துண்டுத் துணியில் கொட்டிச் சிறிய மூட்டை போலச் சேர்த்துக் கட்டி, நல்ல சூடாக இருக்கும் பொழுது வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
இந்தவிதமாக ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை ஒத்தடம் கொடுத்தால் வேதனைக் குறைந்துவிடும்.
வீக்கம், இரத்தக்கட்டு இருக்கும் இடத்திற்குத் தேவையான அளவு உப்பும், அதே அளவு புளிச்சதையையும் சேர்த்துக் குழம்புக்குக் கரைப்பது போல கெட்டியாகக் கரைத்து, ஒரு இரும்புக் கரண்டியில் விட்டு அடுப்பில் வைத்து நன்றாகக் கொதிக்க விடவேண்டும். கொதித்தபின் இறக்கிவைத்து அது ஆறிவரும் சமயம் தாளக்கூடிய சூட்டுடன் எடுத்து, வீக்கம், இரத்தக்கட்டு உள்ள இடத்தில் கனமாகப் பற்றுப் போட்டு வந்தால் வீக்கம் குறையும். இரத்தக்கட்டு குணமாகும்.




