தெரிஞ்சுக்கோங்க..!! கஷ்ட காலத்திலும் தைரியமாக இருப்பது எப்படி?.. அனைவரும் கட்டாயம் படிங்க..!!

பாதை இலகுவா… கஷ்டமா என்று பார்க்காதீர்கள். நீங்கள் செல்லும் பாதை சரியானதா என்று மட்டும் பாருங்கள். போகும் இடத்தை அடைந்து விடலாம்.

எல்லா சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும். ஓஹோ என்று வாழ்ந்து ஒன்றுமில்லாமல் போனவர்களும் உண்டு. ஒன்றுமில்லாமல் வாழ்ந்து ஓஹோ வென்று போனவர்களும் உண்டு. தகுதியை மீறி ஆசைப்பட கூடாது என்பது உண்மை தான். ஆனால், உங்கள் தகுதி என்ன என்பதை மற்றவர் தீர்மானிக்க கூடாது.

துன்பத்தை தூரமாக வைத்து, இன்பத்தை இதயத்தில் வைத்து, நம்பிக்கையை நமக்குள் வைத்தால், எல்லாம் வெற்றி ஆகும். பயமும் தயக்கமும் உள்ளவர்களிடம் தோல்வி வந்து கொண்டே தான் இருக்கும்.

பயத்தையும் தயக்கத்தையும் தூக்கிப்போடுங்கள். வெற்றி உங்கள் காலடியில் நீங்கள் எப்படி நடக்கிறீர்கள் என்பது முக்கியம் இல்லை. மெதுவாக மிதந்தாலும் சரி, வேகமாக விரைந்தாலும் சரி.

ஆனால் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும் தன்னம்பிக்கை என்ற ஒன்றின் மீது முன்னோக்கியே இருக்க வேண்டும். வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்றால் முதலில் உங்களை இழிவாக நினைப்பவர்களை குறை மட்டும் காண்பவர்களை உங்கள் வாழ்க்கையில் இருந்து ஒதுக்கி விடுங்கள்.

நீ விழுந்த போதெல்லாம் தாங்கிப் பிடிக்கும் இந்தக் கை.. மனம் உடையும்போதெல்லாம் தட்டிக் கொடுக்கும் இந்தக் கை.. தனியே நீ அழும்போதெல்லாம் உன் கண்ணீரைத் துடைக்கும் இந்தக் கை.. அது வேறு யார் கையும் அல்ல.. உன்னுள் உள்ள உனது தன்னம்பிக்கை. அதை மட்டும் ஒரு போதும் இழந்து விடாதே.

எந்த விஷயம் நீ செய்தாலும் என்றுமே நம்பிக்கையோடு கடை பிடிக்க வேண்டிய தாரக மந்திரம் “என்னால் முடியும்… விமர்சனங்கள் முன் வீழ்ந்து விடாதே. விடாமுயற்சி மட்டுமே’’ உன் பெயரை மண்ணில் விதைக்கும் விதையாய் இருக்கும் என்பதை மறந்து விடாதே.

Read Previous

பேசாமல் சாப்பிடவேண்டும் என்று முன்னோர்கள் கூறியதற்கான விஞ்ஞான விளக்கம் இதுதான்..!!

Read Next

பூரான் மற்றும் தேள் கடி விஷம் முறிய..!! இந்த பாட்டி வைத்தியம் போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular