காதலனை திருமணம் செய்ய வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண், இறுதியில் மற்றொருவரை திருமணம் செய்துள்ளார். மத்தியப்பிரதேசத்தில் கடந்த 23ஆம் தேதி ஷ்ரத்தா என்ற இளம்பெண் தனது காதலனை திருமணம் செய்வதற்காக ரயில் நிலையத்தில் காத்திருந்தார். நீண்ட நேரமாகியும் காதலன் வரவில்லை. மன உளைச்சலுக்கு ஆளான ஷ்ரத்தா அங்கேயே அமர்ந்துள்ளார். அங்கு வந்த அவரது கல்லூரி எலக்ட்ரீஷியன் கரண்தீப் சமாதானம் செய்துள்ளார். தொடர்ந்து அவரையே திருமணம் செய்துகொண்டார்.




