உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதி போட்டியில் பி.வி.சிந்து போராடி தோல்வியடைந்தார். 29ஆவது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, இந்தோனேசிய வீராங்கனை வர்தானியுடன் மோதினார். இதில் 21-14, 13-21, 21-16 என்ற புள்ளிகள் கணக்கில் வர்தானி வெற்றிப் பெற்ற நிலையில் பி.வி.சிந்து தோல்வியைச் சந்தித்தார்.




