காமன்வெல்த் போட்டியில் சாதனை படைத்த தமிழக வீரர்களுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை..!!

காமன்வெல்த் போட்டியின் மும்முறை தாண்டுதல் (Triple Jump) பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீண் சித்ரவேலுக்கு ரூ.30 லட்சமும், வெண்கலப் பதக்கம் வென்ற செல்வபிரபுவுக்கு ரூ.20 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

ஒரே போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இரு வீரர்கள் பதக்கங்களை வென்று நாட்டிற்கும், மாநிலத்திற்கும் பெருமை சேர்த்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக முதல்வர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தமிழக வீரர்களின் இந்த சாதனை, இளம் விளையாட்டு வீரர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமையும் என்றும், அவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் அரசு தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

கருவாடு சாப்பிடுவதற்கு முன் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்..!!

Read Next

கொத்தமல்லி புதினா ஜூஸ்: உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular