திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே, விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணையின்போது காவலர்கள் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சம்பவம் தொடர்பாக 2 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
விஷம் அருந்திய இளைஞருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




