சிவகங்கை: திருப்புவனத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயிலில் அஜித்குமார் (27) தற்காலிக முறையில், காவலாளியாக பணிபுரிந்து வந்தார். அவர் 10 பவுன் நகையை திருடியதாக கூறி போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது அஜித்குமார் திடீரென உயிரிழந்தார். போலீசார் அஜித்குமாரை அடித்து கொன்றுவிட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில் திருப்புவனம் காவல் நிலையத்தில் பணியாற்றிய 6 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.




