செங்கல்பட்டு அச்சரப்பாக்கம் அருகே, முன்விரோதம் காரணமாக நண்பர்களான விஜயகுமார் மற்றும் வினோத்குமார் இடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த நிலையில், காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்தபோது மீண்டும் வாக்குவாதம் முற்றி, விஜயகுமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் வினோத்குமாரை சரமாரியாக வெட்டினார். கழுத்தில் குத்தப்பட்ட வினோத்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர்.




