கீழாநெல்லியின் மகத்துவம் கீழடி வரை பேசும் என்ற பழமொழியும் உள்ளது, கீழாநெல்லி சாப்பிட்டவர்களுக்கு மஞ்சள் காமாலை வரவே வராது என்றும் நமது முன்னோர்கள் காலம் காலமாக சொல்லி வருவது வழக்கம்…
சிறியவர் முதல் பெரியவர் வரை மஞ்சள் காமாலையால் அவதிப்பட்டு வந்தால் அவர்களுக்கு தீர்வாக இருப்பது நாட்டு வைத்தியமே அந்த நாட்டு வைத்தியத்தில் மிக முக்கியமாக தரப்படும் மூலிகை பொருள் கீழாநெல்லி தான், கீழாநெல்லி தலையோடு சில மூலிகை விதைகளை அரைத்து அதை பசும்பாலுடன் கலந்து குடித்தால் மஞ்சள் காமாலை வரவே வராது, மஞ்சள் காமாலை உள்ளவர்கள் குடித்தாலும் மஞ்சள் காமாலை நீங்கிவிடும், அதேபோல் கீழாநெல்லி மஞ்சளும் சேர்த்து உடலில் தேய்த்து சில நிமிடம் ஊறவிட்டு குளித்து வந்தால் தோல் நோய்கள் வராமல் தடுப்பதோடு வந்த நோய்கள் அனைத்தும் பரந்து போய்விடும், மேலும் கீழாநெல்லிக்காயை நன்றாக மென்று பல் துலக்கி வர பல்வலி என்பது பக்கத்திலும் அண்டாது, கீழாநெல்லி மூலிகையில் சிறந்தது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய வைத்தியத்தில் முதலிடம் கொண்டது..!!




