குந்தாணி என்ற சொல்லைப் பற்றிய உண்மையான விளக்கம் இதோ..!!

குந்தாணி என்பது நாம் உரலில் நெல்லு கம்பு சோளம் போன்ற தானியங்களை போட்டு குத்தும்போது உரலுக்கு மேலே குத்தும் போது தானியங்கள் சிதறாமல் இருக்கு ஓர் அகன்ற உரலை விட கொஞ்சம் வாயகன்ற மரத்தால் அல்லது மண்ணால் ஆன பாதுகாப்பு கவசம் குந்தாணி பண்டைய காலங்களில் மக்கள் அதிகம் உபயோகித்த பயன்பாட்டில் இருந்த ஓர் உன்னதமான அரிய பொருளே குந்தாணி

ஆனால் கொஞ்சம் குண்டாக இருக்கும் பெண்களை குந்தாணி என்றும் அழைத்தனர் ஏன் அப்படின்னா உரலை விட அகன்ற வடிவில் இருப்பதால் உரல் உடுக்கை வடிவமாக இருக்கும் உரல் பெரும்பாலும் கல் கொண்டே செதுக்கினார்கள் மரத்தாலும் செய்வாங்க உரல்

இதில் குத்திய அரிசி போட்டு மாவும் இடிப்பார்கள் இதனுடன் பனங் கருப்பட்டி நன்கு காய்ச்சிய பாகு பதத்தில் சேர்த்து அரிசி மாவுடன் செய்வதே பச்சைமாவு

நன்றாக வறுத்த எள் பனங்கருப்பட்டி கொண்டு உரலில் இடித்தால் பத்து வீடு தள்ளி மணக்கும்முங்க
கோயில் விழாக்கள் பண்டிகைகள் என்றால் அன்றைய கிராமத்து வீடுகளில் விடிய விடிய உரலில் நெல் அரிசி குத்தும் வேலை அதிகம் இருக்கும்

இன்றும் புதிய வீடுகள் கட்டுபவர்கள் அம்மி ஆட்டுக்கல் உரல் அனைத்தும் வைக்கிறாங்க வீட்டுக்கு வெளியில்

ஒருகாலத்தில் மழைமாணி இது தானுங்க
உரல் அளவு மழை நீர் நிரம்பினால் ஓர் உழவு இரண்டு உழவு என்றும் அரை உரல் நிரம்பினால் அரை உழவு மழை என்றும் கணிப்பார்கள் ஊர் பெருசுகள்

கிராமத்தில் ஒரு பழமொழி இருக்குமுங்க முறை பெண்களை இப்படித்தாணுங்க சொல்லுவோம்

மாமன் புள்ளை மந்தாணி

அத்தை புள்ளை குந்தாணி

அந்த காலத்தில் பிரபலமாக இருந்த உரலும் குந்தாணியும் உலக்கையும் இப்போது எங்கே என்று தேட வேண்டிய சூழ்நிலையில் இன்றைய காலத்து மக்கள்.

Read Previous

இது மரத்தின் கதை அல்ல..!! நம் பெற்றோர்களின் கதை..!! கண்டிப்பாக அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய மனதை உருக்கும் பதிவு..!!

Read Next

கூட்டுக்குடும்பம்..!!கூட்டுக் குடும்ப வாழ்வியல் முறையில் இருக்கும் நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular