Oplus_131072
குறட்டையை நிறுத்தும் இயற்கை மருந்து
குறட்டை உண்டாக காரணம் என்ன?
சுவாச பாதையில் இருக்கும் மென் திசுக்கள் வீக்கமுற்று நாம் சுவாசிக்கின்ற போது வீக்கத்தின் ஊடே காற்று செல்லும்போது ஏற்படும் அதிர்வால் குறட்டை உண்டாகிறது.
தேவையான பொருட்கள்:
மஞ்சள், ஏலக்காய், தேன்.
செய்முறை:-கால் ஸ்பூன் மஞ்சள் பொடி எடுக்கவும்.
இதில் ஏலக்காய் தட்டிபோடவும். பின்பு ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இறுதியாக வடிகட்டி தேன் சேர்க்கவும். இதனை இரவு தூங்கபோகும் முன்பு தினமும் 50 மில்லி அளவுக்கு குடித்துவர குறட்டை ஒலி குறைந்து விடும். சளிக்கு மருந்தாகவும் அமைகிறது.இந்த மருந்துநெஞ்சக சளியை கரைக்கும் என்பதும் கூடுதல் பலன் ஆகும்..




