குழந்தை பிறந்ததிலிருந்து தாய்ப்பால் என்பது குழந்தைக்கு மிகவும் அவசியமான ஒன்று. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் ஏராளம் எண்ணில் அடங்காதவை. பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் தான் கொடுக்க வேண்டும் தண்ணீர் மற்றும் வேறு எந்தவிதமான உணவுகளையும் கொடுக்கக் கூடாது என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான். இதில் தாய்ப்பாலுக்கு பின் அதே அளவிற்கு சத்தளிக்கும் திட உணவு என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
குழந்தைக்கு ஆறு மாதம் ஆகியவுடன் தாய்ப்பாலுக்கு பின் தரப்படும் முதல் விட உணவு என்னவென்றால் கேழ்வரகு தான். அதாவது கேழ்வரகை கழுவி நக்கு ஊறவைத்து பின்னர் அதனை அரைத்து வடிகட்டி அதிலிருந்து பால் எடுத்து அந்தப் பாலை குறைந்த தீயில் இந்த ராகி பாலை முழுமையாக வேகவைத்து குழந்தைக்கு கொடுப்பதன் மூலம் குழந்தைகள் உடல் எடை அதிகரிக்கும். மற்றும் தாய்ப்பாலை போன்ற இதிலும் சத்துக்கள் ஏராளம்.




