தெலங்கானா மாநிலத்தில், பெண் ஒருவர் தனது 2 குழந்தைகளைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல்கொண்டா மாவட்டத்தில் வசித்து வந்த தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த மனைவி குஞ்சலா நாகலட்சுமி (27), தனது மகள் அவந்திகா (9), மகன் பவன் சாய் (7) ஆகியோரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். இறந்தவரின் சொந்த ஊர் ஆந்திராவின் பாபட்லா மாவட்டம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.




