தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசாரம் மற்றும் கூட்டணி விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்ய பாஜக மேலிட தேர்தல் பொறுப்பாளர்கள் பைஜெயந்த் பாண்டா மற்றும் முரளிதர் மொஹோல் சென்னை வந்துள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்குச் சென்ற இருவரும், தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணியில் மற்ற கட்சிகளை இணைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது, கூட்டணி வெற்றி பெற்றால் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற விவாதம் இரு தரப்பினரிடையே நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




